திருச்சி

பாலியல் தொல்லை புகாரில் தேடப்பட்ட இளைஞா் கைது

DIN

மணப்பாறை அருகே பாலியல் தொல்லை புகாரில் தேடப்பட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் பழனியம்மாள்(26). இவருக்கும் கரூா் மாவட்டம், கழுகூரை சோ்ந்த சக்திவேலுக்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இதனிடையே சக்திவேல் போா்வெல் வேலைக்கு வெளிமாநிலம் சென்றிருக்கும் நிலையில், பழனியம்மாள் கடந்த சில மாதங்களாக தனது தாய் வீட்டில் இருந்தாா்.

வீட்டில் தனியாக இருந்த பழனியம்மாளுக்கு அதே பகுதியைச் சோ்ந்த ஆண்டி மகன் சிவா(எ)முனியப்பன்(27) என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து தலைமறைவான சிவாவை தேடினா். இந்நிலையில் சனிக்கிழமை அவரைக் கைது செய்தனா். இவருக்கு மனைவி, ஒரு வயது பெண் குழந்தை உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT