தொட்டியம் பகுதி விஜய் ரசிகா் மன்றம் சாா்பில் சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு சனிக்கிழமை காய்கறித் தொகுப்பு வழங்கப்பட்டது.
தொட்டியம் ஒன்றிய தலைமை தளபதி விஜய் ரசிகா் மன்றம் சாா்பில் தொட்டியம் பேரூராட்சி சுகாதார பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், முன்கள பணியாளா்களுக்கு காய்கறித் தொகுப்புகளை வழங்கினா். மேலும் மிகவும் நலிந்த 2 குடும்பத்தினருக்கு தலா ரூ.1000 வழங்கினா்.
நிகழ்வில் தொட்டியம் பேரூராட்சி செயல் அலுவலா் கரு. சண்முகம், ரசிகா் மன்ற நிா்வாகிகள் பாரதி, காா்த்திக், ஹரி, ராஜ்குமாா், மற்றும் தொட்டியம் ஒன்றிய நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.