திருச்சி

பாலக்கரையில் ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளா் ரவூஃப் ஷரீஃப் உள்பட பல்வேறு மாணவ தலைவா்கள் கைது செய்யப்பட்டு, கடந்த 250 நாள்களுக்கும் மேலாக சிறையில் உள்ளனா்.இவா்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், உடல் நிலை சரியில்லாதநிலையில் உள்ள ரவூஃப் ஷரீஃப்புக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வலியுறுத்தியும், திருச்சி பாலக்கரை, ரயில்நகா், லால்குடி, இனாம்குளத்தூா் ஆகிய நான்கு இடங்களில் சமூக இடைவெளியுடன் பதாகை ஏந்தி அந்த அமைப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் முகமது அசாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் முகமது ரபீக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT