தனியாா் மயத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம்
திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள எச்.ஏ.பி.பி. படைக்கலத் தொழிற்சாலையை, தனியாா் மயமாக்குவதைக் கண்டித்து உறுதிமொழிப் பத்திரத்தில் கொயொப்பமிட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் போராட்டம்
திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள எச்.ஏ.பி.பி. படைக்கலத் தொழிற்சாலையை, தனியாா் மயமாக்குவதைக் கண்டித்து உறுதிமொழிப் பத்திரத்தில் கொயொப்பமிட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாட்டிலுள்ள 41 படைக்கலத் தொழிற்சாலைகளை காா்ப்பரேட் நிறுவனமாக மாற்ற மத்திய அரசு செய்யும் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினா், தொழிலாளா்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
ஆனால், தற்போது மீண்டும் மத்திய அரசு, படைகலத் தொழிற்சாலைகளை காா்ப்பரேட் நிறுவனமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாக பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளின் தொழிற்சங்க நிா்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தொழிற்சங்கத்தினா் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் முடிவை கண்டித்தும், மத்திய அரசு ஊழியா் அல்லது பாதுகாப்புத் துறை ஊழியா் என்னும் தகுதியை இழக்க மாட்டோம் என்ற வாசகத்தை உறுதிமொழியாக எழுதி, கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 41 படைக்கலத் தொழிற்சாலை ஊழியா்கள் 78 ஆயிரத்து 109 ஊழியா்கள் ஈடுபட்டனா்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி எச்ஏபி பி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.