ரூ.76 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 76 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 76 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை, வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்க அலுவலா்கள் சோதனை செய்தனா்.
அப்போது தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த செந்தில்(33) மணிமாறன்(34) ஆகிய இருவரும் சோ்ந்து, ரூ.76 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 600 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலா்கள், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.