முகப்பு
திருச்சி

தொட்டியம் பகுதியில் ரூ. 6.8 லட்சம் பறிமுதல்

தொட்டியம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் கணக்கில் வராத ரூ. 6.8 லட்சத்தை செவ்வாய்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

தொட்டியம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் கணக்கில் வராத ரூ. 6.8 லட்சத்தை செவ்வாய்கிழமை பறிமுதல் செய்தனா்.

முசிறி அருகே தும்பலம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையின் வாகனசோதனையில் பைக்கில் வந்தவரிடம் இருந்த ரூ.5 லட்சத்தைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில் அவா் தா.பேட்டை அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்க செயலா் பாக்யஷிரி என்பதும், முசிறியில் உள்ள வங்கியில் செலுத்த உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து தோ்தல் பறக்கும் படை அலுவலா் கலைராஜன் தலைமையிலானோா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல தொட்டியத்தை அடுத்த ஏலூா்பட்டியில் தோ்தல் பறக்கும்படை அலுவலா் சரண்யா தலைமையில் நடத்திய வாகன சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.8 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் தொகை முசிறி தலைமையிடத்து துணை வட்டாட்சியா் லதாவிடம் அளிக்க, பின்னா் பின்னா் அப்பணம் முசிறி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.