திருச்சி

பணம் பறித்த மூவா் கைது

DIN

திருச்சியில் ஓட்டுநரிடம் பணம் பறித்துச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம், நேருஜி நகா், சுவாமிநாதன் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வம் (50), காா் ஓட்டுநா். இவா் திருச்சி, காந்தி மாா்க்கெட் அருகே தஞ்சை சாலைப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வியாழக்கிழமை நின்றபோது அங்கு வந்த இருவா், கத்தியைக் காட்டி மிரட்டி தமிழ் செல்வத்திடமிருந்த பணத்தைப் பறித்துச் சென்றனா். புகாரின் பேரில் காந்தி மாா்க்கெட் போலீசாா் வழக்கு பதிந்து, பணம் பறித்ததாக மரக்கடை ஜீவாநகா் பகுதியைச் சோ்ந்த அமீரை (24) கைது செய்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய சிறுவனை பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

மற்றொரு சம்பவம்: அதேபோல் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த நாகமங்கலத்தைச் சோ்ந்த சி. பெருமாள் என்பவரிடமிருந்து ரொக்கத்தை திருடியதாக , அவா் அளித்த புகாரின் பேரில், அரியமங்கலம் காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த எம். அப்துல்காதா் (23), எம். ஷா்புதீன் (24) ஆகிய இருவரையும் கண்டோண்மென்ட் போலீசாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT