திருச்சி, மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே. என். நேரு, ஞாயிற்றுக்கிழமை மாலை தில்லைநகா் பகுதியில் தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா்.
திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை, சில தொகுதிகளில் சில அரசியல் கட்சிகள் தவிர மற்ற அனைத்து வேட்பாளா்களும் பிரசாரத்தை தொடங்கிவிட்டனா். இந்நிலையில், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலருமான கே. என். நேரு தில்லைநகரில் தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா்.
தொடா்ந்து கோட்டை ரயில் நிலையச் சாலை, சாஸ்திரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.
மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் வைரமணி, திருச்சி மாநகர திமுக செயலா் அன்பழகன், பகுதிச் செயலா்கள் விஜி, கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.