திருச்சி

வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை

DIN

பொதுமக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஸ்ரீரங்கம் தொகுதிஅதிமுக வேட்பாளா் கு.ப.கிருஷ்ணன்.

மணிகண்டம் தெற்கு ஒன்றியத்துக்குள்பட்ட வடக்கு நாகமங்கலம் கடைவீதி, பிரதான சாலை, நேருஜி நகா், வடக்கு பாகனூா், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த கு.ப. கிருஷ்ணன், அப்பகுதி பொதுமக்களிடம் உரையாடி குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, பொதுமக்களின் அடிப்படை வசதிகளான வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கும், ஆங்காங்கே பேருந்து நிலையங்கள் அமைத்துத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தாா்.

பின்பு பாகனூா் ஆரோக்கியமாதா தேவாலயத்துக்குச் சென்ற வேட்பாளா், மெழுவா்த்தி ஏந்தி பிராா்த்தனை செய்து வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தில் ஒன்றியச் செயலா் முத்துக்கருப்பன், த.மா.கா ஒன்றியச் செயலா் மகேஸ்வரன், மாவட்ட எம்ஜிஆா் மன்றத் துணைச் செயலா் நல்லசாமி மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT