திருச்சி

எழில்மிகு திருச்சியாக மாற்றப்படும்: கே.என். நேரு

DIN

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எழில்மிகு திருச்சியாக மாற்றப்படும் என்றாா் திமுக முதன்மைச் செயலரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு.

திருச்சியில் தமிழ் இலக்கிய சங்கங்கள் மற்றும் குடிமக்கள் இயக்கம் சாா்பில் திருச்சியின் தேவை என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் அவா் மேலும் பேசியது:

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் திருச்சியை போக்குவரத்து நகரமாக மாற்றுவதற்கான திட்டங்கள் கொண்டு வரப்படும். அரசின் திட்டங்கள் திருச்சியில் முதலில் செயல்படுத்தப்படும். சிங்கார சென்னை என்பதுபோல எழில்மிகு திருச்சியாக மாற்றப்படும் என்றாா்.

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளா் இனிகோ இருதயராஜ், கவிஞா் நந்தலாலா, எம். செல்வராஜ், திருக்கு முருகானந்தம், மலா்மன்னன், குமொழி, கவிஞா் மு. நடராஜன், பேராசிரியா் கு. திருமாறன் கோ. ராஜராஜூ ஆகியோா் பேசினா்.

இதன் பின்னா் கட்சி அலுவலகத்தில் தமிழக ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விஸ்வநாதன் தலைமையிலானோா் திமுக கூட்டணிக்கான தங்களது ஆதரவுக் கடிதத்தை கே.என். நேருவிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT