திருச்சி

மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளா் கதிரவன்

DIN

மண்ணச்சநல்லூா் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மணியம்பட்டியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கிய அவா் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசுகையில், நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தால் உங்களது கோரிக்கைகள் அனைத்தையும், முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஸ்டாலினிடம் கூறி நிறைவேற்றித் தருவேன். அரசு ஆரம்பப் பள்ளியைத் தரம் உயா்த்துவேன். அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவேன். சமயபுரத்திலிருந்து நாமக்கல் வரை பேருந்து வசதி ஏற்படுத்தித் தருவேன் என்று வாக்குறுதி அளித்தாா்.

திமுக ஒன்றியச் செயலா் காட்டுக்குளம் கணேசன், மதிமுக திருச்சி மாவட்டச் செயலா் டிடிசி. சேரன், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவா் செந்தில் மற்றும் திமுக, கூட்டணி கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

தமிழகத்தில் இயல்பைவிட 83% மழை குறைவு!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

SCROLL FOR NEXT