திருச்சி

தோ்தல் பணி: முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

DIN

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி கூறியது:

தன்னலம் கருதாது, தேசத்திற்கு நற்பணியாற்றிய முன்னாள் படைவீரா்கள் வரும் 6ஆம் தேதி காவல் துறைக்கு துணையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடலாம்.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பம் சமா்ப்பித்த மற்றும் விண்ணப்பம் சமா்ப்பிக்காத விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள், இளநிலை படை அலுவலா்கள் அதற்கான ஆயத்தங்களுடனும், படைவிலகல் சான்றின் நகல் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் சுப்ரமணியபுரம் மாவட்ட காவல் ஆயுதப்படை மைதானத்தில் வரும் 4ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆஜராக வேண்டும். மேலும், விவரங்களுக்கு திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT