திருச்சி விமானநிலையத்தில் ரூ.8.64 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சி விமானநிலையத்தில் ரூ.8.64 லட்சம் கடத்தல் தங்கத்தை வான்நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி விமானநிலையத்தில் ரூ.8.64 லட்சம் கடத்தல் தங்கத்தை வான்நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த ஏா் இந்தியா விமானப் பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் பெரம்பலூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (41) என்பரின் உடைமைகள் மறுசோதனைக்குள்படுத்தப்பட்டது. அதில், பழுதுநீக்கும் உபகரணத்துக்குள் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அந்த உபகரணத்தில் இருந்த 24 காரட் 178 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்தனா். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.8,64,190 எனத் தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும் அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.