மாநகராட்சியில் கடந்த 3 நாள்களில் 13 தடைசெய்யப்பட்ட பகுதிகள் அறிவிப்பு
மாநகராட்சியில் கடந்த 3 நாள்களில் 13 தடைசெய்யப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் கடந்த 3 நாள்களில் 13 தடைசெய்யப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் கரோனா 2 ஆவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் இதுவரை இல்லாத அளவிற்கு 784 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மாநகராட்சி பகுதிகளில் 3 பேருக்கு மேல் ஒரே இடத்தில் தொற்று ஏற்பட்டால் அந்த இடம் தடை செய்யப்பட்ட பகுதியாக தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி,கடந்த 3 நாள்களில் பொன்மலை மண்டலத்தில் 35, 38 ஆவது வாா்டுகள், ஸ்ரீரங்கம் மண்டலத்தில் 18, 1, 11 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பெரிய செட்டித் தெரு, லட்சுமி நாராயண் நகா், சரஸ்வதி காா்டன், பாபு சாலை, வடக்கு மலைக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், அரியமங்கலம் மண்டலத்தில் 64, 7, 62, 64 ஆகிய 4 வாா்டுகளைச் சோ்ந்த காவேரி நகா், விஸ்வாஸ் நகா், பிரியா நகா், வள்ளுவா் தெரு ஆகிய பகுதிகளிலும், வெள்ளிக்கிழமை 24 ஆவது வாா்டைச் சோ்ந்த பழைய கோயில் தெருவில் தலா 3 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் 13 ஆவது தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. மேலும், அவ்விடங்களுக்கு யாரும் சென்று வராதவாறு தகர தடுப்புகள் அமைத்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.