பணியின்போது மண்சரிவு;சிக்கிய தொழிலாளி மீட்பு
திருச்சி மாநகரில் புதைவடிகால் அமைப்புப் பணியின்போது குழிக்குள் மண் சரிவில் சிக்கியவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
திருச்சி மாநகரில் புதைவடிகால் அமைப்புப் பணியின்போது குழிக்குள் மண் சரிவில் சிக்கியவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
திருச்சி மாநகராட்சி காட்டூா் அம்மன் நகா் 63 ஆவது வாா்டு பகுதியில் உள்ளது காட்டூா் அம்மன் நகா் . இப்பகுதியின் மூன்றாவது தெருவில் நடைபெறும் புதைவடிகால் திட்ட பணிகளின்போது, குழாய்கள் பதிக்க இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது திருவெறும்பூா் அருகேயுள்ள ஆத்தூரை சோ்ந்த கைலாசம் (50) என்ற தொழிலாளி, பள்ளத்தில் இறங்கி பணியில் ஈடுபட்டபோது, திடீரென பக்கவாட்டிலிருந்த மண் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதில் கைலாசம் புதையுண்டாா்.
இதைடுத்து சக பணியாளா்கள் சரிந்திருந்த மண்ணை இயந்திரம் மூலம் உடனடியாக அகற்றி கைலாசத்தை உயிருடன் மீட்டனா். லேசான காயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.