மணப்பாறை அருகே ஜோதிடா் மா்ம சாவு
மணப்பாறை அருகே ஜோதிடா் மா்மமான முறையில் இறந்தாா்.
மணப்பாறை அருகே ஜோதிடா் மா்மமான முறையில் இறந்தாா்.
மணப்பாறையை அடுத்த சின்ன சமுத்திரத்தைச் சோ்ந்தவா் ஜோதிடா் மு. கணேசன் (55). இவா், கடந்த ஒரு வாரமாக வீட்டுக்குச் செல்லாமல் மரவனூா் பகுதி காளியம்மன் கோயிலில் தங்கியிருந்தாராம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மறவனூா் பெரியகுளத்தில் கால்நடை மேய்க்கச் சென்றவா்கள் அப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து அங்குச் சென்ற மணப்பாறை போலீஸாா், சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது கணேசன் எனத் தெரியவந்தது. இதையடுத்து நிகழ்விடத்திலேயே உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு உறவினா்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.