முகப்பு
திருச்சி

பொதுமுடக்கம் விதிமீறல்: ஒரே நாளில் 800 வழக்குகள்

திருச்சியில் பொதுமுடக்க விதிகளை மீறிய வகையில் மாநகர காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சுமாா் 800 வழக்குகள் வரை பதிவு செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

திருச்சியில் பொதுமுடக்க விதிகளை மீறிய வகையில் மாநகர காவல் துறையினா் வெள்ளிக்கிழமை சுமாா் 800 வழக்குகள் வரை பதிவு செய்துள்ளனா்.

வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு பின்னா் வாகனங்களில் தேவையின்றி திரிவோா் மீது வழக்குகள் பதியப்பட்டன.

அந்த வகையில், ஆட்டோக்கள் (2) மற்றும் காா்களில் (ஓட்டுநருடன் சோ்த்து 4) குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிப்போா், மற்றும் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிவோா், சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணியாதோா் மீது வெள்ளிக்கிழமை மாலை வரை சுமாா் 800 வழக்குகள் பதிவு செய்தனா்.

சனிக்கிழமைக்குப் பின்னா் மேலும் அதிகளவில் வழக்குகள் பதிவு செய்யவும் போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.