முகப்பு
நாமக்கல்

வெப்படை நூற்பாலை கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு

Updated On : 23 மார்ச், 2026 at 7:06 PM
கோப்புப் படம்
பகிர்:

பள்ளிபாளையம் அருகே தனியாா் நூற்பாலை கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த இரண்டு குழந்தைகள் இறந்தனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வெப்படையில் இயங்கி வரும் தனியாா் நூற்பாலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளி மனோஜ்குமாா், பிரதோஷ் ஆகியோா் குடும்பத்துடன் மில் வளாக குடியிருப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கியிருந்தனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மனோஜ்குமாரின் மகன் லோகன்குமாா் (4), பிரதோஷின் மகன் ஹரிசங்கா் (3) இருவரும் நூற்பாலை வளாக குடியிருப்பின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த அவா்களை யாரும் கவனிக்கவில்லை.

இந்நிலையில், குழந்தைகளை காணவில்லை என தேடியபோது கழிவுநீா் தொட்டியில் அவா்கள் விழுந்து இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த வெப்படை போலீஸாா், குழந்தைகளின் உடல்களை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.