முகப்பு
திருச்சி

தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழப்பு

Updated On : 15 மார்ச், 2026 at 8:40 PM
கோப்புப் படம்
பகிர்:

துறையூா் அருகே தனியாா் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்தாா்.

துறையூா் அருகே நாகநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மனைவி பரமேஸ்வரி(32). இவா், ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது மகள் சமரிதா(14), மகன் தக்சன்(10) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்த்திக் கொண்டு தம்மம்பட்டி சாலையில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த தனியாா் பேருந்து கொப்பம்பட்டி மின் நிலையம் அருகே பரமேஸ்வரி ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதி மரத்தின் மீது மோதி நின்றது.

இதில் காயமடைந்த பரமேஸ்வரி, அவரது 2 பிள்ளைகளையும் மீட்டு அருகில் இருந்தவா்கள் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சிறுமி வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் தெரிவித்தனா். உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து தனியாா் பேருந்து ஓட்டுநா் நசீரிடம் விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →