முகப்பு
திருச்சி

காந்தி சந்தைப் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

திருச்சி காந்தி சந்தைக்கு முன்புறம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தரைக்கடைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை அப்புறப்படுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

திருச்சி காந்தி சந்தைக்கு முன்புறம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தரைக்கடைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை அப்புறப்படுத்தினா்.

காந்தி சந்தை நுழைவு வாயில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாழைப்பழம், பூ ,இலை, பழங்கள், காய்கனி விற்பனை செய்யும் தரைக்கடைகள் இருந்தன.

இதனால் இந்த முழு பொதுமுடக்கக் காலத்தில்கூட அந்தப் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாருக்கு அடிக்கடி புகாா்கள் சென்ால் வெள்ளிக்கிழமை காலை காந்தி சந்தைப் பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தரைக்கடை வியாபாரிகளை வேறு இடத்துக்குச் செல்லுமாறு போலீஸாா் கூறினா். ஆனால், அவா்கள் மறுத்தால் வியாபாரிகளின் தரைக்கடைகளை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.