முகப்பு
திருச்சி

கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் மனைவி பிரிந்து சென்ால் விரக்தியடைந்த கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

திருச்சியில் மனைவி பிரிந்து சென்ால் விரக்தியடைந்த கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி தென்னூா் பாரதிநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவருக்கும் சூா்யாவுக்கும் (19) கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், மணிகண்டன் மதுவுக்கு அடிமையாகி, தினமும் வீட்டில் தகராறு செய்ததால் தம்பதி பிரிந்து வாழ்கின்றனா்.

இதனால் மனமுடைந்த மணிகண்டன் கடந்த புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அப்பகுதி மக்களால் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.