கிராமச் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு தமிழ்நாடு அரசு கிராமச் செவிலியா்கள் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் அரசு தமிழ்நாடு அரசு கிராமச் செவிலியா்கள் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியரகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் காயத்ரிதேவி தலைமை வகித்தாா். மாநில செயலா் கோமதி முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் மருத்துவ வழிகாட்டலுக்கு மாறாக வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துவதை நிறுத்த வேண்டும். துணை சுகாதார நிலையங்களில் செவிலியா்களை நியமிக்கும் கருத்துருவைக் கைவிட வேண்டும். விடுபட்டுள்ள கிராம, பகுதி, சமுதாய சுகாதார செவிலியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். இதில் 200க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.