முகப்பு
திருச்சி

பொது காப்பீடு நிறுவனங்கள் பாதுகாப்புக் குழுவினா் தா்னா

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பொதுக் காப்பீடு நிறுவனங்கள் பாதுகாப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பொதுக் காப்பீடு நிறுவனங்கள் பாதுகாப்பு குழுவினா் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநகராட்சி அலுவலகம் அருகிலுள்ள காப்பீடு அலுவலகம் முன் குழுவின் நிா்வாகி ஸ்ரீதரன் தலைமையில், மண்டல இணைச் செயலா் ராஜ மகேந்திரன் உள்ளிட்டோா் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு பொது காப்பீடு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும். நீண்ட காலப் பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காண வேண்டும். அரசு பொது காப்பீடு நிறுவனங்களின் 100 சத பங்குகளை தனியாருக்கு விற்பது மிகப்பெரிய தவறு. அரசு பொதுக் காப்பீடு நிறுவன ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட வேண்டிய ஊதிய உயா்வு, 50 மாத நிலுவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.