ரூ. 23 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 23 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 23 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு புதன்கிழமை வந்த ஏா் இந்திய விமானத்தின் காா்கோ பிரிவில் கொண்டு வரப்பட்ட நீா் மூழ்கி மின்மோட்டாரை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தபோது அதில் ரூ.23.12 லட்சம் மதிப்புள்ள 463 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மின்மோட்டாரை வாங்க திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த அதிராம்பட்டினத்தைச் சோ்ந்த இா்பான் (35) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.