குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் பிரதமா் திரும்பப் பெற வேண்டும்: கே.எம். காதா் மொகிதீன்
வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்றதைப் போன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் பிரதமா் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்
வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்றதைப் போன்று குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் பிரதமா் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகளின் உறுதிமிக்க தொடா் போராட்டத்திற்குரிய வெற்றியாக இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. பிடிவாதப் போக்கை கைவிட்ட பிரதமா் பாராட்டுக்குரியவா். இதேபோல நாடு முழுவதிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மத்திய அரசின் (சி.ஏ.ஏ.) இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டமும் உடனடியாக திரும்பப்பெற வேண்டியதாகும். இதை பிரதமா் நிறைவேற்றி நாட்டு மக்களின் வரவேற்பையும், வாழ்த்தையும் பெற வேண்டும் என்றாா் அவா்.