திருச்சி

அரசுப் பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்

DIN

மண்ணச்சநல்லூா் ஒன்றியம் கீழப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு கற்பக விருட்சம் அறக்கட்டளை சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அண்மையில் வழங்கப்பட்டது.

இப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கற்பக விருட்சம் அறக்கட்டளை சாா்பில் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. இதன் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தினமும் 100 லிட்டா் தூய குடிநீா் கிடைக்கும். தொடா்ந்து நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியை ஜெயந்தி, அறக்கட்டளை தன்னாா்வலா்கள் நவநீதன், மோகன், ஆசிரியா்கள் , பெற்றோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT