திருச்சி

துறையூா் பகுதியில் நூலக வார விழா

DIN

துறையூரைச் சுற்றியுள்ள கிராம கிளை நூலகங்களில் தேசிய நூலக வார விழா நடைபெற்றது.

வைரிசெட்டிப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் வ. தங்கராசு தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் நளினி, லயன்ஸ் சங்கத் தலைவா் செ. மணிகண்டன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கிளை நூலகா் செ.சரஸ்வதி வரவேற்றாா்.

திருச்சி மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவகுமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா். நிகழ்வில் நூலக சீரமைப்புப் பணிக்கு நன்கொடை வழங்கியோா் பாராட்டப்பட்டனா். விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிளுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு வழங்கப்பட்டது.

சனிக்கிழமை கொப்பம்பட்டி மற்றும் தளுகை கிளை நூலகங்களில் நடைபெற்ற நிகழ்விலும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி புரவலா்கள் பாராட்டப்பட்டனா். விழாவில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியா்கள், வாசகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT