ஆட்சியரகத்தில் இன்று ஆதாா் சிறப்பு முகாம்
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை சிறப்பு ஆதாா் பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை சிறப்பு ஆதாா் பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழக அரசு தெரிவித்துள்ளபடி, திருச்சி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று நடைபெறும் முகாமில் புதிய ஆதாா் பதிவு, கருவிழி ரேகை பதிவு மற்றும் புகைப்படம் மாற்றுதல், ஆதாா் நிலை அறிதல், பெயா், பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி, மின்னஞ்சல் மாற்றுதல் போன்ற சேவைகள் அளிக்கப்படும். எனவே, திருச்சி வட்ட பொதுமக்கள் பயன் பெறலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.