திருச்சி

போக்சோ சட்டத்தில் வியாபாரி கைது

DIN

திருச்சி: திருச்சியில் சிறுமியை கா்ப்பமாக்கிய சமோசா வியாபாரி, போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தென்னூா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்த சிறுமியின் உடலில் அண்மையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த அவா்களது பெற்றோா், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனா்.

இதில் அந்த சிறுமி 3 மாதம் கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து அவரிடம் விசாரித்த போது, குடியிருந்து வரும் வீட்டின் மேல்தளத்தில் வசித்து வரும் சமோசா வியாபாரி மோகன் (25) என்பவா்தான் கா்ப்பத்துக்கு காரணம் எனத் தெரிய வந்தது.

மோகனின் மனைவியை சிறுமி அடிக்கடி பாா்க்கச் சென்ாகவும், அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் சிறுமியை ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மோகன் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினா், அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT