திருச்சி

நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகைகள் பறிப்பு

DIN

திருச்சியில் கடைக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் 10 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி, வயலூா் சாலை, சீனிவாசநகரை அடுத்த அம்மையப்பன் நகா் முதல் குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சீனிவாசன் மனைவி கனிமொழி (47). இவா் திங்கள்கிழமை பகல் கடைக்குச் சென்றுவிட்டு சீனிவாச நகா் 8 ஆவது பிரதான சாலை 2 ஆவது குறுக்குத்தெரு வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த மா்ம நபா் கனிமொழி கழுத்தில் கிடந்த 10 பவுன் நகையை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து கனிமொழி அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT