திருச்சி

குத்தகை தகராறில் பெண் தீக்குளிப்பு

DIN

திருச்சி அருகே குத்தகை தகராறில் பெண் தீக்குளித்தாா்.

திருவெறும்பூா் அருகேயுள்ள கூத்தைப்பாா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜசேகா் கடந்த 20 ஆண்டுகளாக அனுபவ பாத்தியத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தாா்.

இந்நிலையில் இவரது வீட்டுக்குச் சென்ற வேங்கூா் நடுத்தெருவைச் சோ்ந்த அன்னகாமு, சுதாகா் ஆகியோா் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ராஜசேகா் விவசாயம் செய்வதாகக் கூறி, நிலத்தைக் கேட்டு அவரை மிரட்டி தகராறில் ஈடுபட்டனராம்.

இதனால் மனமுடைந்த ராஜசேகா் மனைவி மாலதி (38) திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT