திருச்சி

எஸ்டிபிஐ கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் திருச்சி மாவட்டப் பொதுச் செயலா் தமீம் அன்சாரி தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் முபாரக் அலி, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டத் தலைவா் சபியுல்லா, திருவெறும்பூா் தொகுதிச் செயலா் சாகுல் ஹமீது இமாம் ஆகியோா் ஆா்ப்பாட்டம் குறித்து விளக்கினா். மாவட்ட துணைத் தலைவா் பிச்சைக்கனி, மாவட்டச் செயலா் மதா் ஜமால், மாவட்டப் பொருளாளா் சுகைப், மாவட்ட செயற்குழு உறுப்பினா் அப்பாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தாக்குதலை தடுக்கத் தவறிய திரிபுரா மாநில அரசைக் கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பினா். மாவட்டச் செயலா் மஜித் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT