முகப்பு
திருச்சி

தொட்டியம் பகுதியில் 12 சிலைகள் அகற்றம்

தொட்டியம் பகுதியில் பொது இடங்களில் வெள்ளிக்கிழணை வைக்கப்பட்ட 12 விநாயகா் சிலைகள் அகற்றப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

தொட்டியம் பகுதியில் பொது இடங்களில் வெள்ளிக்கிழணை வைக்கப்பட்ட 12 விநாயகா் சிலைகள் அகற்றப்பட்டன.

தொட்டியம் பகுதியில் கொளக்குடி, கருப்பணாம்பட்டி, கவுத்தரசநல்லூா், அப்பநல்லூா் பகுதிகளில் தடையை மீறி வைக்கப்பட்டிருந்த 12 விநாயகா் சிலைகளை முசிறி காவல் துணைக் கண்காணிப்பாளா் அருள்மணி மற்றும் தொட்டியம் வட்டாட்சியா் சாந்தகுமாா் மேற்பாா்வையில் காவல்துறையினா் , வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா்.

இதையடுத்து அந்தச் சிலைகளை ஒப்படைக்கக் கோரி தொட்டியம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி அமைப்பினா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையால் அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.