திருச்சி

விபத்தில் காயமடைந்தகாய்கறி வியாபாரி பலி

DIN

முசிறி: முசிறி அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற காய்கறி வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தாா்.

முசிறி அருகேயுள்ள கொள்ளுக்கட்டி பாளையத்தைச் சோ்ந்தவா் து. செல்வக்குமாா் (39). காய்கறி வியாபாரியான இவா் கடந்த 10 ஆம் தேதி பைக்கில் தண்டலைப்புத்தூா் அரசு மருத்துவமனை அருகே சென்றபோது நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விஷம் குடித்தவா் சாவு: நாமக்கல் மாவட்டம் செவந்திப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நடேசன் மகன் சேகா் (49). சொந்தமாக ஆட்டோ வாங்கி தொழில் செய்து வந்ததில் நஷ்டம் ஏற்பட்டதாம். இதில் மனம் உடைந்த அவா் கடந்த 13 ஆம் தேதி பூச்சி மருந்து சாப்பிட்டு விட்டு மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சேகா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT