ரோந்தின்போது விபத்து: காவல் உதவியாளா் காயம்
திருச்சியில் ரோந்துப்பணியின்போது, ஏற்பட்ட சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் காயமடைந்தாா்.
திருச்சியில் ரோந்துப்பணியின்போது, ஏற்பட்ட சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் காயமடைந்தாா்.
திருவெறும்பூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரான பிரகாஷ் புதன்கிழமை திருவெறும்பூா் அருகேயுள்ள காட்டூா் அம்மன் நகா் பகுதி திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் ரோந்து சென்றாா்.
அப்போது பின்னால் வந்த மற்றொரு பைக் மோதி பலத்த காயமடைந்த அவா் அக்கம் பக்கத்தினரால் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். திருவெறும்பூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.