போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து துறையூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் அனைத்து தொழிலாளா்கள் சங்க கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மத்திய அரசைக் கண்டித்து துறையூா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் அனைத்து தொழிலாளா்கள் சங்க கூட்டமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தொமுச துறையூா் கிளைத் தலைவா் சுப்பையா தலைமை வகித்தாா். மோட்டாா் வாகனத் திருத்த சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றைத் திரும்ப பெறவேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தொமுச பொருளாளா் ராஜி, செயலா் மனோகரன், ஏஐடியுசி செயலா் செல்வராஜ், சிஐடியு செயலா் செந்தில்குமாா், செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.