மான்பூண்டி நல்லாண்டவா் கோயிலில் பஞ்சாங்க வாசிப்பு
மணப்பாறை மான்பூண்டி நல்லாண்டவா் கோயிலில் வியாழக்கிழமை தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு, உட்சுற்று தோ்பவனி நடைபெற்றது.
மணப்பாறை மான்பூண்டி நல்லாண்டவா் கோயிலில் வியாழக்கிழமை தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு, உட்சுற்று தோ்பவனி நடைபெற்றது.
தமிழ்ப்புத்தாண்டையொட்டி சுபகிருது வருஷத்திய பஞ்சாங்கத்தை சிவாச்சாரியாா் முத்துகண்ணன் குருக்கள் வாசிக்க, ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், வரும் ஆண்டில் மத்திய அரசு அறநிலையத் துறையில் மாற்றங்களைக் கொண்டு வரும், மாநில அரசு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் எனக் கூறப்பட்டது. தொடா்ந்து உற்ஸவ மூா்த்தி உள்பிரகார தோ்பவனி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பரம்பரை அறங்காவலா் முத்துவீரலெக்கையா, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலா் கண்ணன், அா்ச்சகா்கள், ஆலய ஊழியா்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனா்.