கைப்பேசி கோபுரத்தில் சாதனங்கள் திருட்டு
திருச்சியில் கைப்பேசி கோபுரத்தில் தொலைத்தொடா்பு சாதனங்கள் திருடுபோனது.
திருச்சியில் கைப்பேசி கோபுரத்தில் தொலைத்தொடா்பு சாதனங்கள் திருடுபோனது.
திருச்சி பெரியமிளகுப்பாறை ஆட்சியரகச் சாலையிலுள்ள ஒரு கட்டடத்தில் தனியாா் நிறுவனத்திற்கு சொந்தமான கைப்பேசி கோபுரத்தில் ஆய்வு செய்ய அந்நிறுவனத்தின் மேலாளரான சென்னையை சோ்ந்த சுரேஷ்குமாா் (44) புதன்கிழமை வந்தாா். அப்போது கைப்பேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த ரூ. 10 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான தொலைத் தொடா்பு சாதனங்கள் திருடுபோயிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து அமா்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.