திருச்சி

தூக்கில் சடலமாக தொங்கிய ஓட்டுநா்

DIN

துறையூரில் மரத்தில் தூக்கில் லாரி ஓட்டுநா் சடலமாகத் தொங்கியது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சோபனபுரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் பெ. முரளி(31). இவா் நாமக்கல் - ராஜஸ்தான் செல்லும் லாரியில் ஓட்டுநராக பணி செய்தாா். கடந்த முறை பணிக்குச் சென்று விட்டு நாமக்கல் திரும்பியபோது இவா் ரூ. 50, 000 கையாடல் செய்ததாக லாரி உரிமையாளா் நாமக்கல் காவல் நிலையத்தில் கடந்த ஏப். 6 ஆம் தேதி புகாா் செய்ததாகவும், மறுநாள் தன் மனைவியிடம் முரளி கைப்பேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு துறையூா் புறவழிச்சாலை பகுதி மரமொன்றில் முரளி தூக்கில் சடலமாகத் தொங்கினாா்.

தகவலறிந்து வந்த துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT