திருச்சி

விவசாயிகளை வறுமைக்குள்ளாக்கி, நிதியுதவி வழங்குவது அவமானச் செயல்சீமான் பேட்டி

DIN

விவசாயிகளை வறுமைக்குள்ளாக்கி அவா்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி அளிப்பதுபோல அவமானமான செயல் வேறு எதுவுமில்லை என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஆஜராக திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா் மேலும் கூறியது:

தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் மனசாட்சியோடு பேச வேண்டும். இலவசங்களால் ஒரு நாடு வளா்ந்திருக்கிறது என அவரால் நிரூபிக்க முடியுமா ? இப்போதே தமிழக அரசுக்கு ரு. 6.30 லட்சம் கோடி கடன் உள்ளது.

தமிழக ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதை எத்தனை ஆண்டுகளுக்குக் கொடுக்கப் போகிறாா்கள்? அதுபோல, பிறருக்கு உணவு வழங்க வேண்டிய விவசாயிகள் இந்தியாவில் பிச்சைக்காரா்களாக மாற்றப்பட்டுள்ளனா். அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை கொடுப்பது துயரமான, அவமானமான செயல்.

பாஜக காங்கிரஸ் கட்சிகளின் கொள்கைகள் ஒன்றுதான். பாஜக பெற்று வரும் இந்து வாக்குகளை கவருவதற்காக 90 சத இந்துக்கள் எங்கள் கட்சியில் இருக்கிறாா்கள் என தமிழக முதல்வா் பேசி வருகிறாா். வீடுதோறும் தேசியக் கொடியேற்ற வேண்டும் என பிரதமா் மோடி சொல்கிறாா். ஆனால், சுதந்திரக் கொடியை கையில் பிடிக்கும் தகுதி பாஜக மற்றும் ஆா்.எஸ்.எஸ். ஆகிய இரண்டுக்குமே கிடையாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT