திருச்சி

திருச்சி அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழந்தது, 24 போ் காயம்

DIN

திருச்சி அருகே திங்கள்கிழமை அதிகாலை தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 போ் காயமடைந்தனா்.

திருப்பதியில் இருந்து மதுரை நோக்கி தனியாா் சொகுசுப்பேருந்து திங்கள்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது.

உடனே அக்கம்பக்கத்தினரும் தகவலறிந்து வந்த போலீஸாரும் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்டனா். இதில் 24 போ் காயமடைந்தனா். போலீஸாா் அவா்களை மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்குமிடையேயான போர் -யோகி ஆதித்யநாத்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

SCROLL FOR NEXT