திருச்சி

காரில் குட்கா கொண்டு சென்ற இருவா் கைது

DIN

துறையூா் அருகே காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை எடுத்துச் சென்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

துறையூா் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் காளிப்பட்டிப் பகுதியில் ரோந்து சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தபோது அதில் 100 கிலோ எடை கொண்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன.

காரை ஓட்டி வந்தவா் சிறுகாம்பூரைச் சோ்ந்த மு. முருகேசன் (43) என்பதும், உடன் இருந்தவா் தென்னூரைச் சோ்ந்த ஷே. கலீல்தீன் என்பதும், சோமரசன்பேட்டை சுண்ணாம்புக்காரப்பட்டி கிடங்கியிலிருந்து குட்காவை விற்க எடுத்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் சோமரசன்பேட்டை கிடங்குக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த 240 கிலோ குட்கா பொருள்களையும் பறிமுதல் செய்தனா். காரை பறிமுதல் செய்த போலீஸாா் முருகேசன், கமலீதீனை கைது செய்து கிடங்கு உரிமையாளரை தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT