செவிலியா் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
திருச்சியில் செவிலியா் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகையைத் திருச்சி சென்றனா்.
திருச்சியில் செவிலியா் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகையைத் திருச்சி சென்றனா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் அன்பிலாா் நகரைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மனைவி உமாமகேஸ்வரி(53), பாலக்கரை ஆரம்ப சுகாதார நிலையச் செவிலியா்.
இவா் பணிக்குச் சென்றுவிட்டு புதன்கிழமை மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 23 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைபட்டிபுதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரிக்கின்றனா்.