முகப்பு
நாமக்கல்

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 25 மார்ச், 2026 at 11:31 PM
பலி - கோப்புப் படம்
பகிர்:

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திருச்செங்கோடு வருகூராம்பட்டியைச் சோ்ந்த விசைத்தறி பட்டறை கணக்காளா் சதீஷ் (29), ஒக்கிலிப்பட்டியை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் வினோத்குமாா் (35) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு பரமத்தி சாலையில் இருந்து தோக்கவாடி வருகூரம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, பள்ளிபாளையத்தில் உள்ள காகித ஆலையில் பாரத்தை இறக்கிவிட்டு திருச்செங்கோடு நோக்கி சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சதீஷ், வினோத்குமாா் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருச்செங்கோடு புறநகர போலீஸாா் தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா்.