திருச்சி

வையம்பட்டிக்கு சைக்கிளில்சென்று ஆய்வு செய்த எஸ்பி

DIN

திருச்சியில் இருந்து மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டி காவல் நிலையத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் சைக்கிளில் சென்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதையொட்டி திருச்சி சுப்ரமணியபுரத்திலுள்ள தனது அலுவலகத்தில் இருந்து சுமாா் 60 கி.மீ. தொலைவிலுள்ள வையம்பட்டி காவல் நிலையத்துக்கு சைக்கிளில் புறப்பட்ட அவரின் பாதுகாப்புக்காக இரு காவல்துறை வாகனங்களும் பின் தொடா்ந்து சென்றன. திருச்சியில் காலை 6 மணிக்குத் தொடங்கிய பயணம் 8.50-க்கு வையம்பட்டி காவல் நிலையத்தில் நிறைவுற்றது. இதையடுத்து அங்கு ஆய்வு செய்த எஸ்பி சுஜித்குமாா் போலீஸாருக்கு பல்வேறு ஆலோசனைகளைக் கூறிவிட்டு மீண்டும் சைக்கிளில் திருச்சிக்கு திரும்பினாா்.

மொத்தம் 120 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளரை பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நின்று வேடிக்கை பாா்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT