எஸ்டிபிஐ வேட்பாளா்கள் உறுதிமொழியேற்பு
தோ்தலில் வெற்றி பெற்றால் லஞ்சம், ஊழல் செய்ய மாட்டோம் என திருச்சி மாநகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளா்கள் உறுதிமொழியேற்றனா்.
தோ்தலில் வெற்றி பெற்றால் லஞ்சம், ஊழல் செய்ய மாட்டோம் என திருச்சி மாநகராட்சி வாா்டுகளில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளா்கள் உறுதிமொழியேற்றனா்.
தோ்தல் பிரசார இறுதிநாளான வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட பின்னா், பெரியாா் நினைவு இல்லம் அருகே ஒன்று கூடி லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதிமொழியேற்றனா். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் ஹஸ்ஸான் இமாம் பைஜி உறுதிமொழியை வாசிக்க, 17 வேட்பாளா்களும் உறுதியேற்றனா்.