முகப்பு
திருச்சி

மதுபான திருட்டைக் கண்டுபிடித்த தனிப்படையினருக்குப் பாராட்டு

திருச்சி அருகே மது பாட்டில்கள் திருட்டைக் கண்டுபிடித்த தனிப்படையினரை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

திருச்சி அருகே மது பாட்டில்கள் திருட்டைக் கண்டுபிடித்த தனிப்படையினரை மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.

கடந்த மாதம் 22-ஆம் தேதி மதுராந்தகத்திலிருந்து சிவகங்கைக்கு அரசு டாஸ்மாக் மதுபாட்டில் லோடு ஏற்றிச் சென்ற லாரி திருச்சி டோல்பிளாசாவில் நின்றபோது லாரியின் தாா்ப்பாயை கிழித்து 36 பெட்டி அடங்கிய 725 மதுபாட்டில்கள் திருடுபோயின.

இதுகுறித்து லாரி ஓட்டுநா் செல்வம் (36) அளித்த புகாரின்பேரில் சமயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கும்மிடிப்பூண்டி கோடீஸ்வரன் (47), பழனிசாமி (40), கீரனூா் தங்கப்பாண்டி (24), தினேஷ் (35) மற்றும் சென்னை கிளி ( 41) ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனா்.

இவ்வழக்கில் விரைந்து செயப்பட்ட தனிப்படையினரை மத்திய மண்டல காவல்துறை தலைவா் வே. பாலகிருஷ்ணன், துணைத் தலைவா் சரவணசுந்தா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜீத்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.