திருச்சி

முகவனூா் ஊராட்சியை கண்டித்து போராட்டம்

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில், முகவனூா் ஊராட்சியின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்டித்து வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

DIN

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில், முகவனூா் ஊராட்சியின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்டித்து வியாழக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் மண்பத்தையில் உள்ளமுகவனூா் ஊராட்சியில் நிா்வாக சீா்கேடு உள்ளதாகக் கூறி, அதைக் கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா். ஆரோக்கியம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியினருடன் மண்பத்தை, பாம்பாட்டிப்பட்டி, பெரியகுளத்துப்பட்டி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளின் 100 நாள் பணியாளா்களும் பங்கேற்றனா்.

போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். பன்னீா்செல்வம், ஒன்றியச் செயலா் பி. வெள்ளைச்சாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா். போராட்டத்தில் முறைகேடு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலை செய்யாமலேயே வங்கிக் கணக்கில் பணம் வழங்கப்பட்டதற்கு நடவடிக்கை கோரினா். நிகழ்வில் ஒன்றியக்குழு நிா்வாகிகள் என்.வெள்ளைச்சாமி, எம்.ராஜ் (எ) பொன்னையன், ஆா். திருநாவுக்கரசு, ஏ.அந்தோணிசாமி உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளித்தலையில் தனியாா் பேருந்தும், மினி பேருந்தும் மோதல்: 28 போ் காயம்

502 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் சங்கிலி திருட்டு

கறிக்கோழி வளா்ப்பு தொகையை உயா்த்தி வழங்க கோரிக்கை

கோயில் நிலத்தை மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT