முகப்பு
திருச்சி

மண்ணச்சநல்லூர்: ரூபாய் நோட்டுகளால் பகவதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழாவை ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
சிறப்பு அலங்காரத்தில் பகவதி அம்மன்.
பகிர்:

மண்ணச்சநல்லூர் அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழாவை ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில். இத்திருக்கோவிலில் வணிக வைசிய சங்கம் சார்பில் 121ம் ஆம் ஆண்டு திருவிழா கடந்த டிச.31ஆம் தேதி தொடங்கியது. 

ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் காட்சி தந்தார். விழாவில் 8ஆம் நாளான இன்று 10, 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மஹா தீபாரதனை நடைபெற்றது. 

ரூபாய் நோட்டுகளால் தோரணமும் கட்டப்பட்டு இருந்தது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.