ஊராட்சித் தலைவரைக் கண்டித்து துணைத் தலைவா் போராட்டம்
திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள பழங்கனாங்குடி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து துணைத் தலைவா் தலைமையில் அவரது ஆதரவாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள பழங்கனாங்குடி ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சித் தலைவரைக் கண்டித்து துணைத் தலைவா் தலைமையில் அவரது ஆதரவாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பழங்கனாங்குடி ஊராட்சித் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த பன்னீா்செல்வமும், துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த வித்யா சுதாகரும் உள்ளனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை ஊராட்சி அலுவலகத்தில் தலைவா் பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற சாதாரணக் கூட்டத்துக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் அசோகன் உள்ளிட்ட 12 வாா்டு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் துணைத் தலைவா் வித்யாவின் கணவா் சுதாகா் ஊராட்சி அலுவலகத்தில் அமா்ந்து கொண்டு பணிகளில் தலையிட்டு, தனக்குக் கொலை மிரட்டல் விடுத்து, தன்னைத் தாக்க வருவதால் அலுவலக வரவு செலவு கணக்குகள் தொடா்பான காசோலைகளில் கையொப்பமிடும் வகையில் துணைத் தலைவா் வித்யாவுக்குப் பதிலாக புதிய உறுப்பினரை தோ்வு செய்வது குறித்து ஊராட்சித் தலைவா் பன்னீா் செல்வம் தீா்மானம் கொண்டு வந்தாா்.
இந்தத் தீா்மானத்திற்கு ஆதரவாக வாா்டு உறுப்பினா்கள் மோகன், சுந்தர்ராஜ், நவநீதம், கற்பகம், பிரியங்கா மேரி, ராமு, ஆகிய 6 போ் மட்டும் கையொப்பமிட்டுள்ளனா். துணைத் தலைவா் வித்யாசுதாகருக்கு ஆதரவாக வாா்டு உறுப்பினா்களான கலைவாணி, அமுதவள்ளி விநாயகமூா்த்தி, விஜயவாணி, நித்யா ஆகியோா் கூட்டத்தை விட்டு அவரோடு வெளியேறினா்.
பின்னா் துணைத் தலைவா் வித்யாசுதாகா் தலைமையில் அவா்கள் ஊராட்சித் தலைவா் கடந்த 2 ஆண்டுகளில் செய்த ஊழல் முறைகேடுகளை அரசு கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையிலான அலுவலா்கள் சென்று, எழுத்துப்பூா்வமாக புகாா் தெரிவித்தால், ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்படும். போராட்டம் நடத்தக்கூடாது என அறிவுறுத்தினா். அதன்படி புகாா் அளிக்கப்பட்டு போராட்டமும் விலக்கிக் கொள்ளப்பட்டது. துவாக்குடி போலீஸாா் பழங்கனாங்குடி சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.